என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சச்சின் டெண்டுல்கர்"
- "டைமிங்" மற்றும் "ஷாட் செலக்ஷன்" ஆகியவற்றில் ஹனிஃப் கை தேர்ந்தவர்
- 1958ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஹனிஃப் சாதனை புரிந்தார்
"லிட்டில் மாஸ்டர்."
கிரிக்கெட் விளையாட்டில் இந்த பட்டத்தை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar); அதற்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar).
1971லிருந்து 1987 வரை கவாஸ்கர் இந்தியாவிற்காக 125 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள், 34 சென்சுரிகள், 50க்கும் மேல் சராசரி ரன் குவிப்பு என பெரிய சாதனைகளை புரிந்ததால், சுனில் கவாஸ்கர் "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்படுவது பொருத்தம்தான். டெஸ்ட் விளையாட்டில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் அந்தஸ்தை பெற்றவரும் கவாஸ்கர்தான்.
பவுன்சர்களுக்கு சாதகமான விக்கெட்டுகளில், ஹெல்மெட் அணியாமல், உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு சிறப்பாக விளையாடியது அவரது சாதனைக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
ஆனால், முதல் முதலாக "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்பட்ட சிறப்பான வீரர், கவாஸ்கர் அல்ல.
பாகிஸ்தான் அணியை சேர்ந்த பேட்ஸ்மேன், ஹனிஃப் மொகம்மது (Hanif Mohammad), அப்பட்டத்திற்கு சொந்தமானவர்.
1952லிருந்து 1969 வரை அந்நாட்டிற்காக 55 டெஸ்ட் மேட்சுகள் விளையாடி, 3915 ரன்கள் குவித்த ஹனிஃப் மொகம்மது, 43.5 எனும் சராசரியில் ரன்களை குவித்தார்.
பேட்டிங் செய்பவர்களுக்கு அவசியமான "டைமிங்" மட்டும் "ஷாட் செலக்ஷன்" ஆகிய இரண்டிலும் ஹனிஃப் கைதேர்ந்தவர்.
டெஸ்ட் மேட்சுகளில் ஆசியாவிலிருந்து முதலில் 300 ரன்கள் அடித்த பெருமை ஹனிஃபிற்கு உண்டு.
1958ல் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் 970 நிமிடங்களில் 337 ரன்கள் அடித்து தோல்வியை நோக்கி சென்ற பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை எளிதாக்கினார்.
2016 ஆகஸ்ட் 11 அன்று தனது 81-வது வயதில், நுரையீரல் நோய் சிகிச்சை பலனின்றி காலமானார்.
முதல் லிட்டில் மாஸ்டரான ஹனிஃப் மொகம்மதுவின் சாதனையை பல வருடங்களுக்கு பின், 1997ல் இலங்கையின் சனத் ஜெயசூரியாவும், 2004ல் வீரேந்தர் சேவாக்கும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
- சச்சின் அணியில் இர்பான் பதான், அஜந்தா மெண்டிஸ், ஹர்பஜன் சிங், ஆர்பி சிங் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
- யுவராஜ் தலைமையிலான அணியில் யூசுப் பதான், முரளிதரன், மகாயா நீட்னி, சமிந்தா வாஸ், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
பெங்களூரு:
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதிலிருந்து எப்போதாவது சமூக சேவை மற்றும் தொண்டு நிறுவனம் தொடர்பான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது உண்டு.கொரோனா காலகட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான கிரிக்கெட் போட்டியில் சச்சின் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் தற்போது பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் சச்சின் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளார். பெங்களூருவில் வரும் 18-ம் தேதி இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் இருந்து கிடைக்கும் பணம் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ஒரு அணியும், யுவராஜ் சிங் தலைமையிலான மற்றொரு அணியும் விளையாட உள்ளது. சச்சின் அணியில் நமன் ஒஜா, பத்ரிநாத், இர்ஃபான் பத்தான், அசோக் டின்டா, அஜந்தா மெண்டிஸ், ஹர்பஜன் சிங், ஆர்பி சிங் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
யுவராஜ் சிங் தலைமையிலான அணியில் பார்த்திவ் பட்டேல், முகமது கைஃப், யூசுப் பத்தான், ஜேசன் கிரிசா, முரளிதரன், மகாயா நீட்னி சமீன்தா வாஸ், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டிக்கு தயாராகும் விதமாக சச்சின் டெண்டுல்கர் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
இந்த போட்டிக்காக சச்சின் டெண்டுல்கர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- விராட்கோலி இளமையாக இருக்கிறார்.
- கோலி விளையாடும் விதத்தை பார்க்கும்போது அவர் விரும்பும் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.
கொல்கத்தா:
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி, டெஸ்டில் 29 சதம், ஒருநாள் போட்டியில் 50 சதம், 20 ஓவர் போட்டியில் ஒன்று என 80 சதங்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலி முறியடிப்பார் என்று வெஸ்ட்இண்டீஸ் அணி முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிளைவ் லாயிட் கூறியதாவது:-
விராட்கோலி இளமையாக இருக்கிறார். அவர் விளையாடும் விதத்தை பார்க்கும்போது அவர் விரும்பும் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும். அவருக்கு அந்த திறமை இருக்கிறது. அவரது கையில் நேரமும் இருக்கிறது.
விராட் கோலி, விவ்ரிச்சர்ட்ஸ் இருவரும், இரண்டு வகையான கிரிக்கெட் வீரர்கள். எனவே அவர்களை ஒப்பிட முடியாது. சர்வதேச போட்டி அட்டவணையில் அதிக டெஸ்ட் கிரிக்கெட் இடம் பெற வேண்டும். இருதரப்பு டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் மூன்று போட்டிகள் இருக்க வேண்டும் என்றார்.
- முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 291 ரன்கள் குவித்தது.
- அதிகபட்சமாக சவுமியா சங்கர் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சவுமியா சங்கர் - அனுமுள் களமிறங்கினர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வங்காளதேச அணி, சவுமியா சங்கரின் சிறப்பான ஆட்டத்தால் 291 ரன்கள் குவித்தது. அவர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர் கொண்டு சதம் அடித்தார். 22 பவுண்டரி 2 சிக்சருடன் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேசம் அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த சதத்தின் மூலம் நியூசிலாந்து மண்ணில் சச்சின் சாதனையை சவுமியா முறியடித்துள்ளார். சச்சின் 2009-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 163 ரன்கள் எடுத்ததே ஆசிய அணிகளில் உள்ள ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த சாதனையை தற்போது வங்காளதேச வீரர் சவுமியா சங்கர் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் வங்காளதேச அணி வீரர்களில் ஒருவரின் தனிபட்ட அதிகபட்ச ரன்களில் சவுமியா சங்கர் 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் லிட்டன் தாஸ் (176) உள்ளார்.
- டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எட்டுவதற்கு கோலிக்கு இன்னும் 20 சதங்கள் தேவை.
- ஆண்டுக்கு அவர் 5 சதங்கள் அடித்தாலும் கூட டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வதற்கு அவர் மேலும் 4 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியம்.
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுவரை 80 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 50 சதம், டெஸ்டில் 29 சதம், 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு சதம்) அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எட்டுவதற்கு இன்னும் 20 சதங்கள் தேவை. இப்போது கோலிக்கு 35 வயதாகிறது. ஆண்டுக்கு அவர் 5 சதங்கள் அடித்தாலும் கூட டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வதற்கு அவர் மேலும் 4 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியம். அப்போது அவருக்கு 39 வயதாகி விடும். இதன்படி பார்த்தால் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது மிக மிக கடினம்.
இன்னும் 20 சதங்கள் அடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். நிறைய வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் விளையாடி கூட 20 சதங்களை எடுத்ததில்லை. கோலியால் இதை செய்ய முடியாது என்று சவால் விடமாட்டேன். ஆனால் உங்களுடைய வயது எப்போதும், எதற்காகவும் நிற்காது. கோலியால் பல சாதனைகளை படைக்க முடியும். என்றாலும் 100 சதம் என்பது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது.
அதே நேரத்தில் கோலியால் மட்டுமே இச்சாதனையை நெருங்க முடியும். அவரது கட்டுக்கோப்பான பேட்டிங், ஒழுக்கம், அர்ப்பணிப்புக்கு நான் ரசிகன். ஒவ்வொரு போட்டிக்கும் அவர் தயாராகும் விதம், அதற்காக அவர் வழங்கும் கடின உழைப்பு இவற்றை எல்லாம் பார்க்கும் போது அவருக்கு எப்படி ரசிகராக இல்லாமல் இருக்க முடியும். டெண்டுல்கர் போன்று அவரும் 100 சதங்கள் அடித்தால் மகிழ்ச்சி அடைவேன். டெண்டுல்கர் எனது அன்பான நண்பர். ஏற்கனவே சொன்னது மாதிரி விராட் கோலிக்கு நான் தீவிர ரசிகன்.
இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் திறமை வாய்ந்த பேட்டராக இந்தியாவின் சுப்மன் கில் திகழ்கிறார். வரும் ஆண்டுகளில் அவர் கிரிக்கெட் களத்தில் வெகுவாக ஆதிக்கம் செலுத்துவார். அவரால் என்னுடைய சாதனைகளையும் தகர்க்க முடியும். அவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் பட்சத்தில், என்னுடைய முதல்தர கிரிக்கெட் சாதனையையும் (501 ரன்), டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது அதிகபட்ச ரன் சாதனையையும் (400 ரன்) நிச்சயம் தாண்ட முடியும்.
சுப்மன் கில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் செஞ்சுரி அடிக்கிறார். ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகரமான இன்னிங்ஸ் ஆடியுள்ளார். வருங்காலத்தில் அவர் நிறைய ஐ.சி.சி. தொடர்களை வெல்வார்.
இவ்வாறு லாரா கூறியுள்ளார்.
- விராட் கோலி 50 சதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் 49 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
- 2023 உலகக்கோப்பை தோல்வியை வைத்து அவருடைய கேரியரை யாரும் முடிவு செய்ய வேண்டியதில்லை.
மும்பை:
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்தார்.
மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரரான சச்சினின் சாதனையை தகர்த்து விராட் கோலி புதிய சாதனை படைத்தார். இந்த வரிசையில் விராட் கோலி 50 சதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் 49 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
இந்நிலையில் தம்முடைய உலக சாதனைகளை தகர்த்த விராட் கோலியிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நிறைய திறமைகள் இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-
விராட் கோலி 50-வது சதத்தை அடித்ததில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த சமயத்தில் அவருடைய பயணம் இத்துடன் நின்று விடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 2023 உலகக்கோப்பை தோல்வியை வைத்து அவருடைய கேரியரை யாரும் முடிவு செய்ய வேண்டியதில்லை.
இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட இருக்கிறார். அவரிடம் நாட்டுக்காக இன்னும் சிறப்பாக விளையாடி நிறைய சாதனை செய்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வேட்கை அதிகமாக இருக்கிறது. இந்தியாவுக்கு சொந்தமான சாதனை எப்போதும் இந்தியாவிடம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஒட்டி சச்சின் டெண்டுல்கர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி உள்ளார்.
இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையுடன் விராட் கோலி விளையாடி வருகிறார். 2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ள நிலையில், இறுதிப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முன்னணி வீரர்கள், பிரபலங்கள் என பலரும் மைதானத்திற்கு வந்துள்ளனர்.
A special occasion & a special pre-match moment ?Sachin Tendulkar 2011 ? Virat Kohli 2023 Follow the match ▶️ https://t.co/uVJ2k8mp2V#TeamIndia | #CWC23 | #MenInBlue | #Final | #INDvAUS pic.twitter.com/VWAHkf60LV
— BCCI (@BCCI) November 19, 2023
- ஒருநாள் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது.
- ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்து பயன் படுத்துகின்றனர்.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் தனது 50-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது உள்ள விதிமுறை அப்போது இருந்திருந்தால் சச்சின் டெண்டுலகரின் சதங்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருக்கும் என இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒருநாள் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்து பயன் படுத்துகின்றனர். இதனால் 30 ஓவர்களுக்கு பிறகு பந்து ரிவர்ஸ் சுவிங் ஆவதில்லை. மேலும் பவர்பிளேயில் புதிய விதிமுறை பின்பற்றபடுகிறது. ஐசிசி-யின் தற்போதைய விதிமுறை அப்போது இருந்திருந்தால் அந்த காலத்தில் சச்சினின் ரன்களும், சதங்களும் இருமடங்காக உயர்ந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துருவ நட்சத்திரம் படத்திற்கான விளம்பர பணிகளில் கவுதம் வாசுதேவ் மேனன் ஈடுபட்டுள்ளார்.
- தனது அடுத்த படம் குறித்த புதிய தகவலை கவுதம் மேனன் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், துருவ நட்சத்திரம் படத்திற்கான விளம்பர பணிகளுக்காக அவர் மும்பை சென்றிருக்கிறார். இன்று நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டியின் போது தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவுதம் வாசுதேவ் மேனன், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதன்படி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கவுதம் வாசுதேவ் மேனன், கிரிக்கெட்டை மையமாக கொண்டு புதிய படம் இயக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் காம்ப்ளியை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- இளைஞன் "விராட்" எனும் வீரராக உருவெடுத்ததில் மகிழ்ச்சி.
- சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி, இன்று (நவம்பர் 15) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விளாசி சரித்தர சாதனை படைத்திருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம் அடித்த விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.
இது குறித்த எக்ஸ் பதிவில், "முதல் முறை இந்திய டிரெசிங் ரூமில் உன்னை பார்த்தேன், நீ என் காலில் விழுந்ததை சக வீரர்கள் நக்கலடித்தனர். அன்று என்னால் எனது சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், உனது திறமை மற்றும் ஆர்வத்தால் நீ விரைவிலேயே என் மனதை தொட்டுவிட்டாய். ஒரு இளைஞன் "விராட்" எனும் வீரராக உருவெடுத்து இருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்."
"ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததில் எனக்கு மகிழ்ச்சி அதிகம் தான், அதுவும் இத்தனை பெரிய போட்டி- உலகக் கோப்பை அரையிறுதியில்- எனது ஹோம் கிரவுண்டில் முறியடித்தது கேக் மீது ஐஸ் வைத்ததை போன்று இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn't stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a 'Virat' player. I… pic.twitter.com/KcdoPwgzkX
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023
- ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தது சாதனை படைத்தவர் டெண்டுல்கர்.
- டெண்டுல்கரின் இந்த சாதனையையும் விராட்கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலி இந்த உலக கோப்பையில் மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார்.
நெதர்லாந்துக்கு எதிராக அவர் அரைசதம் அடித்தார். 51 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த உலக கோப்பையில் அவர் 5-வது அரைசதம் எடுத்தார். 2 செஞ்சூரியும் அடித்து இருந்தார்.
விராட்கோலி 7-வது முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் டெண்டுல்கர், சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) சாதனையை கோலி சமன் செய்தார். டெண்டுல்கர் 2003 உலக கோப்பையிலும் (1 சதம் + 6 அரைசதம்), சகீப்-அல்-ஹசன் 2019 உலக கோப்பையிலும் (2 சதம் + 5 அரைசதம்) 7 முறை 50 ரன்னுக்கு மேல் எடுத்து இருந்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் 50 ரன்னுக்கு மேல் எடுத்தால் கோலி புதிய சாதனை படைப்பார்.
மேலும் இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்து முதல் இடத்தில் இருந்து குயின்டன் டி காக்கையும் (தென்ஆப்பி ரிக்கா) கோலி முந்தினார்.
அவர் 9 ஆட்டங்களில் 594 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 3 போட்டியில் அவுட் இல்லை என்பதால் சராசரி 99 ஆகும். குயின்டன் டி காக் 4 சதத்துடன் 591 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக ரச்சின் ரவீந்திரா 565 ரன்னும், ரோகித்சர்மா 503 ரன்னும் எடுத்துள்ளார்.
ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தது சாதனை படைத்தவர் டெண்டுல்கர். அவர் 2003 உலக கோப்பையில் 673 ரன்கள் எடுத்தார். டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட்கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 80 ரன் தேவை. இதேபோல டி காக்கும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் உள்ளார்.
- முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை கோலி சமன் செய்தார்
- 2008ல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கோலி ஏலத்தில் தேர்வானார்
இந்தியாவில், அக்டோபர் 5 அன்று தொடங்கிய ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் பரபரப்பாக நடைபெறுகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த போட்டித்தொடரில், தற்போது நடைபெறுவது 13-வது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.
இன்று கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் முக்கியமான போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், விராட் கோலி அடித்த 49 சதங்களை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் அந்த அரங்கிற்கு செல்லும் வழி நெடுக கோலியின் முதல் சதத்தில் இருந்து அவரது 49-வது சதங்களையும் குறிப்பிடும் விதமாக 49 கட்-அவுட்களை வைத்துள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர், விராட் கோலி.
கடந்த 2008ல், ஐ.பி.எல். (IPL) 20 ஓவர்கள் போட்டிக்கான அணிகளில், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இவர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து கோலிக்கு கர்நாடகாவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Karnataka: ICC Men's Cricket World Cup | Ahead of India Vs Netherlands, 49 cut-outs of Indian cricketer Virat Kohli showing his 49 centuries, put up at M Chinnaswamy Stadium in Bengaluru. pic.twitter.com/ixA4dy2J6n
— ANI (@ANI) November 12, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்